கண்ணனின் பொன்மொழிகள்

குற்றம் சொல்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்! ஆனால் மன்னிப்பதற்கு அன்பு மட்டும்தான் காரணமாக  இருக்க முடியும்!
கண்ணனின் பொன்மொழிகள்


குற்றம் சொல்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்! ஆனால் மன்னிப்பதற்கு அன்பு மட்டும்தான் காரணமாக  இருக்க முடியும்!

எண்ணங்கள் தூய்மையாக இருந்தால் எண்ணிய அனைத்தும் ஈடேறும்! 

உன் மனம் தூய்மையாக இருந்தால் மற்றவர்களின் மனங்களை நீ எளிதில் அறிந்து கொள்ளலாம்!

மறுபடி மறுபடி நினைக்கத் தோன்றும் கடந்த காலங்கள்தான் வாழ்வின் வசந்தகாலங்கள்!

வாய்ப்புகள் விலகும்போது அவற்றைப் பற்றிக் கவலைப்படாதே!.... தொடர்ந்து முயற்சி செய்!.... மிகப் பெரிய வெற்றி உனக்காகக் காத்துக் 
கொண்டிருக்கிறது!

உனது ஆழ்ந்த நம்பிக்கையால்தான் உன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறாய்!..., 

இறைவனே முழுமுதற் கடவுள்  என்று நம்புவோர்க்கு எவ்வித இடைஞ்சல்களும் இல்லை! 

நல்ல இலட்சியத்தில் தோல்வியுற்றால், யோசனைகளை மாற்று!.... லட்சியத்தை மாற்றிக்கொள்ளாதே!

இயன்றதை இயலார்க்குக் கொடுப்பதே இறைவனுக்குச் செய்யும் சேவையாகும்!
அநீதிகள் அதிகரிக்கும்போதெல்லாம் இறைவன் தோன்றி நன் மக்களைக் காப்பாற்றுவார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com