நம்பிக்கை கடவுளையும் அசைக்கும்பயம் பலசாலியையும் செயலிழக்க வைக்கும்
-ஜோயன் ஆஸ்டின்
சோம்பல் எல்லா விஷயங்களையும் கஷ்டமாக்கும்.
சுறுசுறுப்பு எல்லாவற்றையும் எளிதாக்கும்
-ஃபிராங்க்ளின்
நற்பண்பு இல்லாதவனின் அறிவு ஆபத்தானது;
அறிவில்லாதவனின் நற்பண்பு பயனற்றது
-நேருஜி
சக மனிதருக்கு உதவுவது ஆண்டவனுக்கு உதவுவதாகும். எனவே எல்லா சமயத்தினரும் சக மனிதருக்கு உதவ வேண்டும். பிரார்த்தனை செய்யுங்கள்- கடவுளுக்கு அருகே நீங்கள் செல்லலாம். ஆனால் சேவை செய்து பாருங்கள்- கடவுள் உங்கள் அருகில் வருவார்
-அன்னை தெரசா
கோபப்படும் மனிதனால் அதிக அளவு சிறப்பாக வேலைகள் செய்ய முடியாது. அமைதியான மன்னிக்கக்கூடிய சமநோக்குடைய நிலை குலையாத மனமுடையவனே அதிக அளவு செயல்பட முடியும்
-சுவாமி விவேகானந்தர்
ஒரு முறை வந்தால் கனவு
இரு முறை வந்தால் ஆசை
பல முறை வந்தால் லட்சியம்
-டாக்டர் அப்துல் கலாம்
வாழ்க்கை என்பது அவரவர் வாழ்வதற்கு என்று மட்டும் எனக் கருதக்கூடாது
மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்
-தந்தை பெரியார்
பேச்சு பெரியதே...ஆனால் மெளனத்தின் மொழி அதைவிடப் பெரியது
-வாரியார்
சகிப்புத்தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண்தான். பெண்களால் அன்பைப் பிரிக்க முடியாது. பெருக்கத்தான் முடியும்
-காந்திஜி