குறள் பாட்டு
பொருட்பால்- அதிகாரம் 58 - பாட்டு 6
மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு
இயைந்துகண் ணோடா தவர்
- திருக்குறள்
ஒளி நிறைந்த கண்களை
முகத்தில் பெற்றுப் பார்க்கிறோம்.
உயர்ந்த கண்ணோட்டம் இல்லையென்றால்
கண்ணிருந்தும் பயனில்லை.
மண்ணில் புதைந்த பட்ட மரம்
மலர்கள் கனிகள் தருவதில்லை.
கனிவில்லாத இரு கண்கள்
புதைந்த மரம் போல் பதிந்திருக்கும்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்