அந்த இளைஞன் நன்றாக உடை உடுத்திக் கொண்டிருந்தான். அவன் பெயர் சுந்தர். இன்று அவனுக்கு நேர்முகத் தேர்வு! அதற்காக அவன் ஒரு அலுவலத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறான்.
"சுந்தர்!'' ....பியூனின் குரல்.
"நான்தான்!'' சுந்தர் எழுந்திருந்தான்.
"உங்களை உள்ளே கூப்பிடறாங்க....''
உள்ளே சென்றான் சுந்தர். நேர்முகத் தேர்வு நடத்திய அதிகாரி சுந்தரிடம், "சுத்தத்தைப் பொறுத்தவரையில் நான் மிகவும் கவனமாக இருப்பேன்!...'' என்றார்.
"நானும்தான் சார்''
"நீங்கள் இந்த அறைக்குள் நுழையும் முன் கதவருகில் உள்ள மிதியடியில் உங்கள் ஷூவை துடைத்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்!...'' என்றார்.
"ஆமாம் சார்....நன்றாகத் துடைத்துக்கொண்டுதான் வந்தேன்!...'' என்றான் சுந்தர்.
அதிகாரி அமைதியாக சுந்தரைப் பார்த்து, "நேர்மையிலும் நான் மிகவும் கவனமாக இருப்பேன்!.... கதவருகே மிதியடியே இல்லை.... நீங்கள் போகலாம்!....'' எனறார்.
- அண்ணாமலையான்