பசு நாம் அருந்தப் பால் தருதே!
பசிக்கு உணவை வயல் தருதே!
தென்றல் வருடி சுகம் தருதே!
தெறிக்கும் கதிர்கள் பகல் தருதே!
களிமண்ணும் கலமாய் நலம் தருதே!
முத்தை உப்புக் கடல் தருதே!
தேயும் நிலவும் ஒளி தருதே!
தேயா வானம் மழை தருதே!
காயும் கனியும் மரம் தருதே!!
கீரை மற்றும் பூக்களுடன்
சமைப்பதற்குக் காய்கறிகள்
அனைத்தையும் தருதே செடிகொடிகள்!
ஓயும் வரையில் இயற்கை நமக்கு
ஒவ்வொரு பயனைத் தருகிறது!
பொழுதை வீணே கழிக்காமல்
பொறுப்பாய் நாமும் செயல்படுவோம்!