அந்ந நாடகம் பார்க்க எல்லோரும் ஏன் கைக்குட்டையோடு போகிறார்கள்?"
"அது ஒரு கண்துடைப்பு நாடகமாம்.
பெ.கருணைவள்ளல்,
திருவஞ்சேரி.
""ரெண்டு ரூபாய்க்கு 32 கிலோ வந்தது!''
""என்னது?..... எங்கே?''
""எடை மிஷின்லே!''
எஸ்.பி.விஜயராஜகோபாலன்,
4/2, சி.பி.டபிள்யூ.டி, சென்னை - 600090
""இதுதான் வீணை தந்திக் கருவி!''
""சூப்பர்!.... இது?....''
""இதுவா,..... இதுதான் "கடம்!' தொந்திக் கருவி!''
தேவி, மெளலிவாக்கம்.
""என்னோட பிறந்த நாளுக்கு எல்லாரும் சாக்லேட் சாப்பிட்டாங்க!..... எனக்கு மட்டும் தரலை""
""அடப் பாவமே!.... ஏன் அப்படி?''
""பிறந்த உடனே எப்படி சாக்லேட் திங்கறது?''
ஏ.நாகராஜன், 5, வீரராகவன் தெரு,
சென்னை - 600075.
""எங்க அக்கா கல்யாணத்துக்கு ஆயிரம் பேரை அழைச்சு "மாஸ்' காட்டணும்னு நெனைச்சோம்!''
""அப்புறம் என்ன ஆச்சு?
""கடைசியிலே 50 பேரை "மாஸ்க்' போட்டு அழைச்சு பண்ணினோம்!''
நெ.இராமன்,
பொழிச்சலூர்.
""பாபு,..... ரொம்ப தாகமா இருக்கு!....
கொஞ்சம் குடிநீர் கொண்டு வா!''
""கபசுரக் குடிநீரா?..... நிலவேம்புக் குடிநீரா?
ஆர்.எம்.ஸ்ரீஅக்ஷயராம்,
திருநெல்வேலி டவுன்.