மலர்களின் வாசம் காற்று வீசும் திசையிலேயே செல்லும். ஆனால் ஒருவர் செய்யும் தர்மமோ நாலா திசையிலும் செல்லும்.
இழந்த செல்வம், ஏற்பட்ட அவமானம், கேட்ட வசைச்சொல் ஆகியவற்றை விவேகமுள்ள மனிதன் வெளியே சொல்லமாட்டான்.
ஆசிரியர், தலைவன், நண்பன், அறிவாளி ஆகியோரிடம் வாக்குவாதம் செய்யவேண்டாம். அதுமட்டுமல்ல.... முட்டாளிடமும் வீண்வாதம் வேண்டாம்.
உனது பலவீனத்தைக் குறிவைப்பவன் உன் நண்பன் அல்ல!
லட்சியம் நிறைவேறும் வரைஅதைப்பற்றி வெளியில் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.
சோம்பேறியும், திருடனும் ஒன்றே.
நியாயம் இல்லாதவனுக்குக் கோபம் வரும்.
உற்சாகம் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது.
உழைக்கும் மனிதனின் உறக்கம் இனிமையானது.
அதிகமாகக் கடன் வாங்குபவன் அதிகமாக இழப்பான். நித்தியானந்தம், திருத்தணி.