அறத்துப்பால் = அதிகாரம் 6 - பாடல் 7
சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
-திருக்குறள்
சிறையில் அடைத்து வைப்பது போல்
சிறகில் அணைத்துக் காப்பது போல்
பெண்களை வெளியில் விடாமல்
வீட்டில் வைப்பது பயனல்ல
பெண்கள் தங்கள் தன்மையை
நெஞ்சில் நிறைத்துப் போற்றுவர்
அந்தத் தன்மை அரியதே
அதன் பெருமை பெரியதே.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்