கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரி சைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் விவசாயிகளை மகிழ வைக்கும் ஒரு நல்ல நிகழ்வின் பெயர் கிடைக்கும். எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். முயற்சியுங்கள்...
1. மெய்ஞ்ஞானத்திற்கு எதிர்ப்பதம்...
2. குளக்கரை, ஆற்றங்கரை அரச மரத்தடியில் வீற்றிருந்து அருள்பாலிப்பவர்...
3. செடிகொடிகளின் இலைகள் சூரிய ஒளியைக் கொண்டு இதைத் தயாரிக்கின்றன...
4. ஒரு நிகழ்வை இப்படியும் சொல்வார்கள்...
5. பெரியவர்கள் இவ்வளவு காலம் வாழ்க என்று வாழ்த்துவார்கள்..
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. விஞ்ஞானம்,
2. பிள்ளையார்,
3. பச்சையம்,
4. சம்பவம்,
5. பல்லாண்டு.
வட்டங்களில் சிக்கிய எழுத்துக்கள் மூலம் கிடைக்கும் சொல் : விளைச்சல்