அறத்துப்பால் - அதிகாரம் 21 - பாடல் 7
எனைப் பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின் சென்று அடும்.
- திருக்குறள்
எத்தனை பகை இருந்தாலும்
எந்தத் தொல்லையும் இல்லாமல்
உய்ந்து வாழ வழியுண்டு
பகையை நட்பாய் மாற்றலாம்
தீய வினைகள் செய்வதால்
தீய பயன்கள் விளைந்திடும்
வினையின் பயன் நீங்காமல்
பின் தொடர்ந்து வருத்திடும்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்