பூங்காவுக்குப் போகலாம்
பொழுதை நன்கு கழிக்கலாம்!
மாங்காய், தேங்காய் சுண்டலும்
வாங்கித் தின்று சுவைக்கலாம்!
வாத்து, குதிரை யானை மேல்
அமர்ந்து துள்ளி ஆடலாம்!
பூத்துக் குலுங்கும் பூக்களைப்
புன்னகை தவழப் பார்க்கலாம்!
வண் ணத்துப் பூச்சி பறப்பதை
கண் ணாரக் கண்டு களிக்கலாம்!
அணில்களோடு பறவைகளின்
குரல்கள் இங்கு மகிழ்ச்சிதான்!
மரங்கள் வீசும் தென்றலை
அனுபவித்து மகிழலாம்!
இன்பம் இங்கு கோடியே
துன்பமெல்லாம் மறக்கலாம்!