துள்ளித் துள்ளி ஓடும்
வெள்ளை ஆட்டுக் குட்டியே
முள்ளு கருவ இலைகளை
பார்த்துப் பறித்துத் தின்றிடு!
மெல்லப் பின்னால் வந்திடும்
மிருதுவான குழந்தையே
பள்ளிக்கூடம் செல்கிறேன்
திரும்பிச் செல்லு வீட்டுக்கு!
படிக்க வைத்தால் நீயுமே
படிக்க மாட்டாய் நிச்சயம்!
வடித்த கஞ்சி கொட்டிலில்
வைத்து உள்ளேன் குடித்திடு!
மலையின் அடி வாரத்தில்
உனது அம்மா மேயுது!
கலக்கம் இன்றிக் இருந்திடு
நிறைய பாலு குடிக்கலாம்!
தங்கை தன்யா தேடுவாள்
ஓடு! ஓடு! சீக்கிரம்!
எங்கள் செல்வம் நீதானே
இன்னும் ஏனோ நிற்கிறாய்?
மடுவின் பக்கம் போகாதே
"மா' வின் நிழலில் படுத்துக்கொள்!
பொட்டுக் கடலை மிட்டாயும்
உனக்கு வாங்கி வருகிறேன்!