பார்வை!
24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியேபார்த்து கத்தினான்!...""அப்பா இங்கே பாருங்கள்!...மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன!...'' என்று.
அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்துக்கொண்டார்.
ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாபப் பட்டுக்கொண்டனர்....
மறுபடியும் அந்த வாலிபன், ""அப்பா மேலே பாருங்கள்!... மேகங்கள் நம்மோடு வருகின்றன..!'' என்று கத்தினான்.
இதென்ன இவ்வளவு பெரிய பையன் இதையெல்லாம் ஒரு அதிசயமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறானே.... அதையும் அவனது தந்தை ரசித்துக் கொண்டிருக்கிறாரே என்று அந்த இளம் தம்பதியினர் விநோதமாக அந்த வாலிபனைப் பார்த்தனர். பிறகு வாலிபனின் தந்தையிடம், ""நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்''
அதற்கு அந்த பையனின் அப்பா சிரித்துக் கொண்டே சொன்னார்...
"நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்...என் மகன் பிறவிக் குருடு. பெரும் முயற்சிக்குப் பிறகு இன்றைக்குதான்அவனுக்கு பார்வை
கிடைத்தது!'' என்றார்.
அந்த இளம் தம்பதியினர் தங்களது பேச்சிற்கு மிகவும் வருந்தினர்.
அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை இழந்துவிடலாம்.