நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விடுகதைகள்

உதை வாங்கி, உதை வாங்கி ஊருக்கு சேதி சொல்லுவான். இவன் யார்?

News image
Updated On :6 மார்ச் 2021, 12:30 am

DIN

1. உதை வாங்கி, உதை வாங்கி ஊருக்கு சேதி சொல்லுவான். இவன் யார்?
2. கருப்பன் தண்ணீரில் குளித்து வெள்ளையனாவான். வெள்ளையானவன் பிறகு விருந்தாவான்...
3. உருவம் இல்லாத ஒருவன், உலகெங்கும் உலவித் திரிவான்...
4.  அடித்தாலும் உதைத்தாலும் இவன் அழ மாட்டான்...
5. எவ்வளவு மழையில் நனைந்தாலும் இவனுக்கு நடுக்கமே வராது... இவன் யார்?
6. அனலில் பிறந்தவன், ஆகாயத்தில் பறக்கிறான்...
7. வயிற்றில் விரல் சுமப்பான்... தலையில் கல் சுமப்பான்...
8. ஓடையில் நிற்கும் ஒற்றைக் காலனுக்கு, ஒரே குறிக்கோள் உணவுதான்...
9. ஒற்றைக்கால் பந்தலில் ஊரெல்லாம் தங்கலாம்... இது என்ன?

விடைகள்

1. தண்டோரா  
2.  உளுத்தம் பருப்பு
3. காற்று  
4.  பந்து    
5.  குடை 
6.  புகை    
7.  மோதிரம்  
8.  கொக்கு 
9.  ஆலமரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.