பேராசை வளரத் தொடங்கினால் அறிவாளியும் முட்டாள் ஆவான்.
தேவையற்ற பேச்சால் நேரம் வீணாகும். திட்டமிட்ட செயல்கள் நிறைவேறாது.
தருமம் இருக்குமிடமே தெய்வத்தின் விலாசமாகும்.
தருமத்தில் நம்பிக்கை இல்லாவிட்டால் மற்ற நல்ல விஷயங்களில் நம்பிக்கை ஏற்படாது.
வாழ்க்கைக் கடலை கடக்க உதவும் தோணி தருமம் ஒன்றே.
தருமத்தை முழுமையாக ஏற்று வாழ்வதே கல்வி கற்றதன் அடையாளம்.
புத்தியால் மனதை அடக்கி ஆள்பவன் வெற்றியின் இலக்கை அடைவான்.
கோபத்தைக் கைவிட்ட மனிதனை துன்பங்கள் நெருங்குவதில்லை.
கடமையில் கவனம் செலுத்துவீர்!.... அதன் பலன்களில் அல்ல.
நல்லெண்ணங்களால் மட்டுமே மனம் வளம் பெற இயலும்.