எட்டயபுரத்தில் பிறந்தவர்!
ஏழ்மையில் பலநாள் வாழ்ந்தவர்
மட்டிலா பெரும்புகழ் பெற்றவர்!
மாநிலம் போற்றும் மாகவி!
பாப்பாவுக்குப் பாடினார்!
பாரதம் உய்ய வாழ்த்தினார்!
தோப்புக் குயிலாய்ப் பாடினார்!
சுதந்திர உணர்வை ஊட்டினார்!
தெய்வ சக்தியைப் பாடினார்!
தேச பக்தியை ஊட்டினார்!
அந்நியர் ஆட்சியை அகற்றவே
அனை வரையும் இசையால் கூட்டினார்!
தோழமை கொண்டு வாழவே
தொண்டு செய்ய வேண்டினார்!
எந்தமிழ் மாகவி பாரதி!
என்றும் வாழ்க வாழ்கவே!