கேள்வி: செழிப்பான பசுமை மிக்க பகுதிகளில்தான் பூச்சிகள் அதிகம் காணப்படுகின்றன. இதற்குக் காரணம் என்ன?
பதில்: இதில் சந்தேகமே வேண்டாம். பூச்சிகளின் ஆட்சி செழிப்பான பசுமைமிக்க பகுதிகளிலும் வறண்ட பாலை வனங்களிலும் கொடிகட்டிப் பறக்கத்தான் செய்
கிறது.
ஆனால் பகல் பொழுதுகளில் பாலைவனத்தில் பூச்சிகள் ஆஜராவதில்லை. இரவு
நேரங்களில் ஏராளமானவை வெளியே வருகின்றன.
வெப்பம் மிகுந்த பகல் பொழுதை மணலுக்கடியில் ஆழமாகப் புகுந்து கொண்டு கழித்து விடுகின்றன. மணலுக் கடியிலும்கூட காய்ந்த இலைகளைக் குடை போல பயன் படுத்தி வெப்பத்திலிருந்து தப்பிக்கின்றன. பாலைவனப் பூச்சிகள் மிகவும் புத்திசாலிகள்.
பசுமைமிக்க பகுதிகளில் பூச்சிகள் அதிகம் காணப்படுவதற்குக் காரணம் நல்ல சீதோஷ்ண நிலை, நல்ல சாப்பாடு ஆகியவைதான் முக்கிய காரணம்.