கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.
ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் மழை வருவதற்குத் தேவையான ஒன்றைக் குறிக்கும் சொல் ஒன்று கிடைக்கும். விடைக்குப் போகாமல் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...
1. பணிப்பெண்னை இப்படியும் அழைப்பார்கள்.
2. கோடை காலத்தில் இந்தப் பழம் நிறையக் கிடைக்கும்.
3. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நதிக்கரைத் திருவிழா.
4. அசுரனை இப்படியும் அழைப்பார்கள்.
5. இது கண்ணீரை வரவழைக்கும்.
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. வேலைக்காரி
2. தர்பூசணி
3. கும்பமேளா
4. கிங்கரன்
5. வெங்காயம்
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : கார்மேகம்