ஒவ்வொரு நேர்மையான செயலும் அதற்குரிய வெகுமதி தரக் காத்திருக்கிறது.
முயற்சிக்குப் பலன் கிடைத்தே தீரும்.
மனசாட்சிக்குக் கட்டுப்பட்டிருந்தால் வாழ்வு நலம் பெறும்.
தொண்டு செய்வதைவிட இனிய அனுபவம் வேறில்லை.
கடவுள் யாரையும் தண்டிப்பதில்லை. ஏனெனில் அவன் அன்பு வடிவானவன்.
மனம் கடவுளின் கருவியாக இருக்க வேண்டும்.
கடவுள் விரும்பும் வழிபாடு உழைப்பு ஒன்றே.
முடிந்த அளவுக்கு குறைவாகப் பேசுங்கள்.
கடவுள் நம்பிக்கையே மனிதனுக்கு உண்மையான உதவி.
துன்பங்களை அனுபவ பாடமாகக் கருதுங்கள்.