பொறுமையாய் இருப்பதும் ஒருவித பிரார்த்தனைதான்.
- புத்தர்
உண்மையாய் இருப்பது ஒரு பெரும் தவமாகும்.
- வியாசர்
எதையும் வெறுக்காதே. யாரையும் ஒதுக்காதே.
- அரவிந்தர்
சுறுசுறுப்பே மனிதனின் பெருஞ்செல்வம்.
- இயேசுநாதர்
தவறை உணர்வதே அதைத் தவிர்ப்பதற்கான முதல்
படியாகும்.
- ஸ்ரீஅன்னை
அறியாமையிலிருந்து அச்சம் பிறக்கிறது.
- எமர்சன்
உலகிலுள்ள அனைத்து சக்திகளிலும் ஆற்றல் நிறைந்தது அன்பு ஒன்றுதான்.
-யாரோ
நல்ல மனிதர்களுக்குச் செய்யும் சேவை, கடவுளுக்குச் செய்யும் சேவைக்கு ஈடாகும்.
- ஸ்ரீராமகிருஷ்ணர்
செயல்களை மிகச் சுலபம் என நினைத்துக்கொள்! அது உண்மையிலேயே சுலபமாகிவிடும்!
- எமிலி
எத்தகைய கல்வி நல்லொழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமையை வளர்க்குமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன் சொந்தக் கால்களில் நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை.
- சுவாமி விவேகானந்தர்