பொன்மொழிகள்

பொறுமையாய் இருப்பதும் ஒருவித பிரார்த்தனைதான். 
பொன்மொழிகள்


பொறுமையாய் இருப்பதும் ஒருவித பிரார்த்தனைதான். 
- புத்தர்

உண்மையாய் இருப்பது ஒரு பெரும் தவமாகும். 
- வியாசர்
எதையும் வெறுக்காதே. யாரையும் ஒதுக்காதே. 
- அரவிந்தர்
சுறுசுறுப்பே மனிதனின் பெருஞ்செல்வம். 
- இயேசுநாதர்
தவறை உணர்வதே அதைத் தவிர்ப்பதற்கான முதல் 
படியாகும். 
- ஸ்ரீஅன்னை
அறியாமையிலிருந்து அச்சம் பிறக்கிறது. 
- எமர்சன்
உலகிலுள்ள அனைத்து சக்திகளிலும் ஆற்றல் நிறைந்தது அன்பு ஒன்றுதான். 
-யாரோ 
நல்ல மனிதர்களுக்குச் செய்யும் சேவை, கடவுளுக்குச் செய்யும் சேவைக்கு ஈடாகும். 
- ஸ்ரீராமகிருஷ்ணர்
செயல்களை மிகச் சுலபம் என நினைத்துக்கொள்! அது உண்மையிலேயே சுலபமாகிவிடும்! 
- எமிலி
எத்தகைய கல்வி நல்லொழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமையை வளர்க்குமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன் சொந்தக் கால்களில் நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை. 
- சுவாமி விவேகானந்தர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com