அறத்துப்பால் - அதிகாரம் 13 - பாடல் 8
ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்று ஆகாதாகி விடும்.
- திருக்குறள்
தீய சொற்கள் பேசாமல்
தேர்ந்து பேச வேண்டும்
தீய சொற்கள் பேசியே
தீமை ஒன்று வந்துவிட்டால்
எத்தனை நன்மை செய்தாலும்
ஏதும் பயன் இல்லாமல்
கேடு வந்து சேர்ந்திடும்
கீழ்நிலையே மிஞ்சிடும்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்