உள்ளத்தில் சுறுசுறுப்பு நுழைந்துவிட்டால் அது எல்லா இன்பத்திற்கும் காரணமாகிறது.
- அலெக்ஸாண்டர் மோஸ்
நம்பிக்கை நிறைந்த மனிதனுக்கு ரோஜாச் செடியில் பூத்திருக்கும் மலர்கள் மட்டுமே தெரியும்! அதன் முட்கள் தெரியாது!
- எமிலி டிக்கன்ஸன்
உழைப்பு உடலை உறுதிபெறச் செய்யும். துன்பங்கள் மனதை உறுதி பெறச் செய்யும்.
- செனேகா
வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். அதில் அனுபவங்களே பாடங்கள்.
- பெஞ்சமின் ஃபிராங்ளின்.
நல்ல எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பல மனங்களில் அதன் விதைப்பு நிகழவேண்டும்.
- ஆபிரஹாம் லிங்கன்
அன்பு, தயை, கருணை ஆகியவற்றால் ஏற்படும் காரியங்கள் அனைத்தும் ஆனந்தத்தைக் கொண்டுவந்தே தீரும்!
- சுவாமி விவேகானந்தர்
கீழ்ப்படியும் பயிற்சி பெற்றவன் கட்டளையிடத் தகுதியுடையவனாக ஆகிறான்.
- அரிஸ்டாட்டில்
வழிகள் இல்லாவிட்டால் என்ன?.... அதைத் தோற்றுவிக்கலாம்!
- தாமஸ் ஆல்வா எடிசன்
துன்பங்களை அனுபவித்த காலங்களை மறந்து விடு! ஆனால் அவை உனக்குத் தந்த பாடங்களை மறந்துவிடாதே.
-பெஞ்சமின் ஃபிராங்ளின்
தெரியாததை ஒப்புக்கொள்பவனே தெரிந்து கொள்ள முயற்சிக்கிறான்.
- அப்துல் கலாம்