1986-இல் ரஷியாவில் செர்னோபில் பகுதியில் அணுஉலை விபத்து ஏற்பட்டபோது, அணுக்கதிர்கள் பல மீட்டர் ஆழத்தில் பாய்ந்து பரவின. அப்படி புவியில் பரவிய அணுக்கதிர்களைக் களைய ஆயிரக்கணக்கணக்கான சூரியகாந்தி செடிகள் பயிரிடப்பட்டன. இந்தச் செடிகள் அணுக்கதிர்களைத் தங்களது கிளைகளிலும், இலைகளிலும், பூக்களிலும் உறிஞ்சிக் கொள்ளும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
உலகிலேயே மிக அதிகமாகத் திருட்டு போகும் உணவுப் பொருள்கள் 'சீஸ்' எனும் பாலாடைக்கட்டிகள்தான். ஓராண்டில் 4 சதவீதம் திருடு போகின்றன. இதன் மதிப்பு 12.7 பில்லியன் பவுண்டு.