மறைந்த மலையாள இயக்குநர் லோகிததாஸ் தமிழில் எடுத்த "கஸ்தூரிமான்', சிறப்பான படம் எனப் பாராட்டப்பட்டு மாநில அரசு விருதைப் பெற்றும் பொருளாதார ரீதியாக அவருக்குப் பெரும் நஷ்டத்தைத் தந்தது. தன்னுடைய கடனுக்காக யாரிடமும் கையேந்தாமல் அவர் அடுத்தடுத்த மலையாளப் பட முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் திடீரென மரணமடைந்தார். மரணத்தின்போது கடன்பட்டிருந்தார். இதையறிந்த மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி லோகிததாஸின் இரண்டு மகன்களின் படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதோடு மலையாளத் திரைப்படச் சங்கங்களும் அவருடைய கடனை அடைத்து குடும்பத்துக்கு உதவி செய்வதாக உறுதியளித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.