"மாயாண்டி குடும்பத்தார்' படத்தின் மூலம் முக்கிய இயக்குநர்கள் பட்டியலில் இணைந்துள்ள ராசு மதுரவன் அடுத்து இயக்கும் புதிய படம் "கோரிப்பாளையம்'. இந்தப் படத்தையும் யுனைடெட் ஆர்ட்ஸ் பட நிறுவனமே தயாரிக்கிறது. "உங்களுடைய முந்தைய படங்களான "பாண்டி', "மாயாண்டி குடும்பத்தார்' போல இதுவும் சென்டிமெண்ட் படமா என கேட்டபோது...
""மதுரையிலுள்ள முக்கியமான பகுதிகளுள் கோரிப்பாளையமும் ஒன்று. அங்குள்ள வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ் நடைபெறும் ஒரு சம்பவம் ஓர் இளைஞனைப் பாதிக்கிறது. அதன்பிறகு அவனுடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்களை எதிர்கொள்கிறான் என்பதுதான் கதை. கதையைத் தயார் செய்த பிறகே அதற்கேற்ற நடிகர்களைத் தேர்ந்தெடுப்பது என் வழக்கம்.
இதில் முன்னணி நடிகர்கள் சிலர் நடித்தால் நன்றாக இருக்கும் எனக் கருதியதால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. படத்தில் வன்முறை, ஆபாசம் இருக்காது.
எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும் சினிமாவையும் சென்டிமெண்ட்டையும் பிரிக்க முடியாதது. அதனால் "கோரிப்பாளையம்' படத்திலும் அர்த்தமுள்ள சென்டிமெண்ட் விஷயங்களுக்குப் பஞ்சம் இருக்காது'' என்றார் இயக்குநர் ராசு மதுரவன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.