மாற்றுத் திறனாளிகளுக்குப் பாதி விலை!

தேனியில் உள்ள தனியார் சிற்றுண்டிக் கடை ஒன்றில் கடந்த 4 ஆண்டுகளாக, மாற்றுத் திறனாளிகளுக்குப் பாதி விலையில் சிற்றுண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்குப் பாதி விலை!
Updated on
1 min read

தேனியில் உள்ள தனியார் சிற்றுண்டிக் கடை ஒன்றில் கடந்த 4 ஆண்டுகளாக, மாற்றுத் திறனாளிகளுக்குப் பாதி விலையில் சிற்றுண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான மனிதநேயப் பங்களிப்பாக, தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த ராஜா (50) என்பவர், மாற்றுத் திறனாளிகளுக்கு பாதி விலை என்ற அறிவிப்புடன் போஸ்ட் ஆபீஸ் ஓடைத்தெருவில் சிற்றுண்டிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நடத்தி வரும் பாணி பூரிக் கடையில் பாணி பூரி, மசால் பூரி, பேல் பூரி, தயிர் பூரி, தகி பூரி உள்ளிட்ட 11 பூரி வகைகளும், இனிப்பு வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது.
 இது குறித்து கடை உரிமையாளர் ராஜா கூறியது: ""தேனியில் கடந்த 14 ஆண்டுகளாக எனது குடும்பத்தினர் சிற்றுண்டிக் கடை நடத்தி வருகிறோம். தொழிலில் லாபம் மட்டுமின்றி சேவை நோக்கமும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 4 ஆண்டுகளாக எனது கடைக்கு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு பாதி விலையில் சிற்றுண்டி வழங்கி வருகிறேன்''
 என்றார்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com