அவசரத்துக்கு ரத்தம்!

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை,எப்படியாவது காப்பாற்றுங்கள்'' என்று விபத்துகளின் போது மருத்துவர்களிடம் பதற்றத்துடன் சொல்லும் நபர்களிடம், ""உங்க ரத்தமும்,பாதிக்கப்பட்டுள்ள உங்கள் உறவினரின் ரத்தமும் ஒரே வகையாகத்தான் இருக்கிறது. உடனடியாக அவருக்கு ரத்தம் செலுத்தி உயிரைக்
அவசரத்துக்கு ரத்தம்!
Published on
Updated on
2 min read

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை,எப்படியாவது காப்பாற்றுங்கள்'' என்று விபத்துகளின் போது மருத்துவர்களிடம் பதற்றத்துடன் சொல்லும் நபர்களிடம், ""உங்க ரத்தமும்,பாதிக்கப்பட்டுள்ள உங்கள் உறவினரின் ரத்தமும் ஒரே வகையாகத்தான் இருக்கிறது. உடனடியாக அவருக்கு ரத்தம் செலுத்தி உயிரைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை இருப்பதால் உங்கள் ரத்தத்தை தர முடியுமா? '' என்று கேட்டால் உடனே மருத்துவமனையை விட்டு தலைமறைவாகி விடுபவர்கள் அதிகம். ரத்தம் கொடுப்பதால் உடலுக்குத் தீங்கில்லை என்று பலரும் சரியான புரிதல் இல்லாமல் இருப்பதே தப்பித்தலுக்குக் காரணம். ரத்தம் கிடைக்காமல் எந்த ஊரிலும்,எந்தவிதமான உயிரிழப்புகளும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே ஓர் இணையதளம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது தான் வியப்புக்குரிய செய்தி.

இதன் முக்கிய நோக்கம் யாருக்கு ரத்தம் தேவையோ,அவர் இருக்கும் இடத்திலேயே, அவரவர் பகுதிகளிலேயே ரத்தம் தரக்கூடிய தன்னார்வ ரத்தக் கொடையாளரை இந்த இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். எந்த வகை ரத்தக் கொடையாளர் தேவை என்பதை அறிந்து,அவரை இணையத்தில் உள்ள செல்பேசி மூலமாக அழைத்து ரத்தம் பெற்றுக் கொள்ள இந்த இணையம் பேருதவியாக இருந்து வருகிறது. எவ்வித இடைத்தரகரும் இல்லாமல்,கட்டணமும் எதுவும் இல்லாமல் தன்னார்வ ரத்தக் கொடையாளர் ரத்தம் தேவைப்படும் இடத்துக்கு அவரே நேரில் வந்து வழங்கிவிட்டுச் சென்று விடுவார். இந்த இணையதளத்தின் பெயர் ஜ்ஜ்ஜ்.ச்ழ்ண்ங்ய்க்ள்ற்ர்ள்ன்ல்ல்ர்ழ்ற்.ர்ழ்ஞ் என்பதாகும். இந்த இணையதளத்தில் இந்தியா முழுவதும் எந்த நேரமும் தன்னார்வத்துடன் ரத்தம் தர தயாராக இருக்கிறோம் என சுமார் 1.50 லட்சம் பேர் வரை தங்களது பெயரை தாமாகவே முன்வந்து பதிவு செய்திருக்கிறார்கள். சாதி, மதம், உயர்வு, தாழ்வு, ஏழை, பணக்காரன் என்கிற எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைத்து மக்களின் ரத்த தேவையையும் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது இந்த இணையதளம். இந்த இணையதளத்தில் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளராகவும் ராமநாதபுரம் அரிமா சங்க செயலாளராகவும் இருந்து வரும் ஏ.வி.சதீஷ்குமாரை அவரது அலுவலகத்தில் ஒரு மாலை வேளையில் சந்தித்துப் பேசினோம்:

"ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வெப்டிசைனர் எஸ்.கே.ஷெரீப் என்பவரது தலைமையில் அவரது நண்பர்களான 5 கணினிப் பொறியாளர்கள் சேர்ந்து கடந்த 14.11.2005 இல் அனைவரது ரத்த தேவையையும் பூர்த்தி செய்வதற்காக துவங்கப்பட்டது.

துவக்கத்தில் 200 பேர் மட்டுமே பெயர்ப்பதிவு செய்திருந்தனர். ஆனால் இன்று சுமார் 1.50லட்சம் பேர் விருப்பம் தெரிவித்து தங்களது பெயர்களை தன்னார்வத்துடன் பதிவு செய்துள்ளனர். துவங்கி 7 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் இதுவரை 1.50லட்சம் பேர் எவ்வித கட்டணமும் பெறாமல் இந்த இணையம் மூலமாக ரத்ததான சேவை செய்திருக்கின்றனர்.

நான் மட்டும் 17 முறை இதுவரை ரத்ததானம் செய்துள்ளேன். இந்த இணையம் குறித்து எனது நண்பர் மூலமாக தெரிந்து கொண்டு முதலில் ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினேன். எனது தலைமையில் 20 பேர் கொண்ட சமூக சேவைக் குழு செயல்படுகிறது. இக்குழுவானது ரத்தக் கொடையாளர்களை கண்டறிந்து இணையத்தில் பதிவு செய்தல், ரத்ததான சேவை செய்ததை பதிவு செய்தல், ரத்தம் தேவைப்படுவோருக்கு தேவையான ரத்தவகை கொடையாளரை இணையம் வாயிலாக இனம் கண்டு அவர்களை தேவைப்படும் இடங்களுக்கு விரைவாக அழைத்துச் செல்லுதல்,ரத்ததான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை எவ்வித கட்டணமும் இல்லாமல் செய்கிறார்கள்.

நான் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளராக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் நியமிக்கப்பட்டேன். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஓர் அமைப்பாளரை நியமிக்கவும் முடிவு செய்திருக்கிறோம்.

www.friendstosupport.org அல்லது friends2Support.org என்ற இணையதளத்திற்குள் சென்றால் எந்த வகையான ரத்தம் தேவை எனக் கேட்கும்.அதை தேர்வு செய்த பிறகு எந்த மாநிலம்,எந்த மாவட்டம், எந்த நகரம் எனக் கேட்கும். தேவைப்படும் நகரத்தில்,தேவைப்படும் நேரத்தில் உடனடியாக எந்த வகை ரத்தக் கொடையாளர் தேவைப்படுகிறார் என சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

அதை தேர்வு செய்தால் தேவைப்படும் ரத்தக் கொடையாளரின் பெயரும்,செல்போனும் வந்து விடும். செல்போனில் அவரை அழைத்து உடனடித் தேவைக்கு ரத்தம் பெற்றுக் கொள்ள முடியும். இதற்குக் கட்டணம் இல்லை. யாருக்கு ரத்தம் தேவையோ அவர் இருக்கும் ஊரிலேயே தன்னார்வ ரத்தக் கொடையாளரை தேர்வு செய்வதே இந்த இணையதளத்தின் நோக்கம்.

தங்களது பெயரையும்,செல்போன் நம்பரையும் இந்த இணையதளத்தின் மூலமாக அவர்களே பதிவு செய்து கொள்ளலாம்.

ரத்ததானம் செய்ததை பதிவு செய்தால் 90 நாட்களுக்கு அவர்களது பெயர் கொடையாளர் பட்டியலில் இருக்காது. ரத்ததானம் செய்த 90 ஆவது நாள் சம்பந்தப்பட்டவரின் செல்பேசிக்கு ஒரு தகவல் வரும். அதில் நாளை முதல் மீண்டும் ரத்ததானம் செய்யலாம் என இருக்கும். ஏனெனில் எப்போது ரத்ததானம் செய்தோம் என்பதை பலரும் மறந்து விடலாம். 90 நாட்களுக்கு ஒருமுறை தான் ரத்ததானம் செய்ய வேண்டும் என்பதால் 90 ஆவது நாள் தகவல் அனுப்பப்படுகிறது.

கணினி மூலம் மட்டுமே பார்க்க முடிந்த இச்சேவையை கடந்த மே மாதம் முதல் செல்போனிலும் பார்க்கும் வசதி துவக்கப்பட்டுள்ளது.

இச்சேவையினை தமிழகத்தில் முதல் முறையாக ராமநாதபுரம் எஸ்.பி.மயில்வாகனன் துவக்கி வைத்தார். இச்சேவை தொடர்பான விழிப்புணர்வு செய்திகள் அடங்கிய ஸ்டிக்கரை தமிழக கைத்தறித்துறை அமைச்சர் டாக்டர்.எஸ்.சுந்தரராஜ் அண்மையில் வெளியிட்டார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 7 பேர் வீதம் ஒரு மாதத்துக்கு சுமார் 200 பேருக்கு இந்த இணையதளம் மூலமாக ரத்ததான சேவை செய்து வருகிறோம்.

மதுரை,சென்னை,தூத்துக்குடி,கொடைக்கானல்,திருநெல்வேலி,ராமநாதபுரம் உள்ளிட்ட நகரங்களில் அங்கு உள்ள தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து விழிப்புணர்வு முகாம்கள்,சைக்கிள் பேரணிகளையும் நடத்தி வருகிறோம்.

ரத்தம் தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்.ரத்தம் கிடைக்காமல் யாரும் உயிரிழந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறோம்.ங்ஹஸ்ரீட் ர்ய்ங்,ழ்ங்ஹஸ்ரீட் ர்ய்ங் என்பதே எங்கள் நோக்கம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com