
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால் சோழன் காவிரியில் அடிக்கடி பெரு வெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதை எண்ணி அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட எண்ணம் கொண்டான்.
ஆனால் அது சாதாரண விஷயமல்ல, என்பதையும் அறிந்தவர். ஒரு நொடிக்கு 2 லட்சம் கன அடி நீர்பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டு பிடித்தார்கள் தமிழர்கள்.
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும். இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள். அவர்கள் காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டு வந்து போட்டார்கள். அந்தப் பாறைகள் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும். அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள். நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களிமண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள். இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும். இப்படிப் பாறைகளின் மேல் பாறையை போட்டு படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் "கல்லணை'
ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன்தான் இந்த அணையை குறித்து பல காலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார்.
காலத்தை வென்று நிற்கும் தமிழரின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை "தி கிராண்ட் அணைக்கட்' என்றார் சர்ஆர்தர் காட்டன். அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.