12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

நடைபயிற்சி செல்வோர் கவனிக்க...?

நடைபயிற்சி செய்வோர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்.

Published On :

நடக்கும்போது ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்துவிட்டு செல்போனில் பேசிக் கொண்டு நடக்க வேண்டாம். முடிந்தவரை செல்போனை வீட்டில் வைத்துவிட்டு நடப்பது நல்லது. தலையை உயர்த்தி, வயிற்றின் தசைகளை மென்மையாக உள்ளிழுத்து கைவீசி நடப்பது நல்லது.

சரியான நடைபயிற்சியில் வியர்ப்பது நல்லது. எனவே இறுக்கமான, பாலியஸ்டர் ஆடைகளைத் தவிர்க்கவும். உடல் சோர்ந்துப் போகாமல் வியர்வையை உறிஞ்சும் வகையில் ஏதுவான காட்டன் ஆடைகளை அணிவது நல்லது.

 நடைபயிற்சி தொடங்கிய முதல் ஐந்து நிமிடங்கள் உடலுக்கு உற்சாகம். 10 முதல் 20 நிமிடங்களில் உடல் வெப்பமடைதல், தோலுடன் சேர்ந்துள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து வெப்பம் வெளியேறி வியர்க்கத் தொடங்கும். சக்தியளிக்கும் ஹார்மோன்களின் சுரப்பு, சுவாசம் அதிகரிப்பு நடைபெறும்.

சுமார் 30 முதல் 45 நிமிடங்களில் உடல் லேசாகி கொழுப்புச் சத்து எரிந்து இன்சுலின் சுரப்பு சீராகும்.

ஒருமணி நேரத்தில் நமது நடையின் வேகத்தைக் குறைக்க, இதயத் துடிப்புச் சீராகி வியர்வை அடங்கிய பின்னரும் ஒருமணி நேரம் கலோரிகள் செலவாகும் என்பது மருத்துவ ரீதியான உண்மை,

அதிக பருமன் உடையவர்கள், இதயம் பலவீனம் உள்ளவர்கள், ஆஸ்துமா பிரச்னை உடையவர்கள், எலும்பு- மூட்டு நோய்களால் பாதிக்கப்பட்டோர் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று நடைபயிற்சியை மேற்கொள்வதே சிறந்தது.

-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.