மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

யாழ்ப்பாண வாக்கிய பஞ்சாங்கம்

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் வாக்கிய பஞ்சாங்கம் 'நல்லி குப்புசாமி செட்டியார் பிறப்பதற்குமுன்பிருந்தே அவரது வீட்டில் பயனில் உள்ளது.

News image
Updated On :13 ஏப்ரல் 2025, 12:05 am IST

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் வாக்கிய பஞ்சாங்கம் 'நல்லி குப்புசாமி செட்டியார் பிறப்பதற்குமுன்பிருந்தே அவரது வீட்டில் பயனில் உள்ளது. போர்க்காலத்துக்கு முந்தைய யாழ்ப்பாண வாக்கிய பஞ்சாங்கங்களின் தொகுப்பும் அவரது வீட்டில் உள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பே இந்த நிலையை அவர் என்னிடம் சொன்னார்.

அதற்கு அடுத்த ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் யாழ்ப்பாணம் வாக்கிய பஞ்சாங்கத்தைக் கொடுக்கும் வழக்கம் எனக்கு ஏற்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அவருக்கு இரண்டு படிகள் கொடுப்பேன். கொழும்பில் வணிகம் செய்த நாராயணன் செட்டியார். அவர், காரைக்குடியை அடுத்த கானாடுகாத்தானைச் சேர்ந்தவர்.

செட்டியார் தனது ஊருக்கே திரும்பினார். அவர் குடும்பத்துக்கும் யாழ்ப்பாணப் பஞ்சாங்கமே பயனில் உள்ளது. அந்தக் காலத்தில் என் தந்தையார் ஆண்டு தோறும் தவறாமல் அவருக்கு யாழ்ப்பாண வாக்கிய பஞ்சாங்கம் அனுப்பி வைப்பார்.

Story image

யாழ்ப்பாண பஞ்சாங்கத்தின் சிறப்பு என்ன?

ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆரிய சக்கரவர்த்திகள் 770 ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் புதிய அரசுப் பரம்பரையைத் தோற்றுவித்தனர். சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகள் எனத் தம்மை அழைத்தனர். அக்காலத்தில் அவர்களுக்குச் சோதிட வல்லுனர்களாக கொக்குவில் இரகுநாதையர் குடும்பத்தார் இருந்து வந்தனர்.

ஆரிய சக்கரவர்த்திகளுக்கு முன்பே இரகுநாதய்யர் குடும்பத்தார் அங்கு வாழ்ந்திருக்கக் கூடும். இன்று வரை அவர்களது பரம்பரையினர் அங்கு வாழ்கின்றார்கள். அவர்களின் முழு நேர தொழில் ஆருடம்தான். முன்பு ஏட்டுச் சுவடிகளாக இருந்த ஜோதிட குறிப்புகள் இக்காலத்தில் அச்சுக்கூடம் ஏறின. புத்தக சாலையும் அமைத்திருக்கிறார்கள்.

பஞ்சாங்கம் கணிப்பதை வாழ்வாகக் கொண்டவர்கள் இவர்கள். மிகச் சுத்தமாகக் கணித்து மக்களுக்கு வழி காட்டுகிறார்கள். முற்காலத்திலும் அண்மையில் நடந்த போர்க் காலத்திலும் யாழ்ப்பாணம் இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் பல பகுதிகளில் இந்த பஞ்சாங்கத்துக்கு மவுசு உண்டு.

மறவன் புலவு க. சச்சிதானந்தம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.