எம்எல்ஏக்கள் ராஜிநாமா! சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு அதிமுக எம்பி கோரிக்கை! தில்லியிலிருந்து புறப்பட்டார் முதல்வர் விஜய்! காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவில்லை! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! 11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

ஈழத்து மெல்லிசை மன்னர்

'ஈழத்து மெல்லிசை மன்னர்' என அழைக்கப்படுபவர் எம்.பி.பரமேஷ்.

News image
Updated On :28 டிசம்பர் 2025, 2:55 pm IST

'ஈழத்து மெல்லிசை மன்னர்' என அழைக்கப்படுபவர் எம்.பி.பரமேஷ். 1980-களில் இலங்கை வானொலியில் இவரது இசையமைப்பில் உருவான பல பாடல்கள் பிரபலம். இவர் தற்போது தனது தந்தை தமிழறிஞர் பீதாம்பரம் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்.

அதற்காகவும், அவரது 60 வருட இசைப் பயணத்துக்காகவும் சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதை அவரது மகளும், இலங்கையின் முதல் தமிழ்ப்பெண் இசை அமைப்பாளருமான பிரபாலினி பிரபாகரன் நடத்தினார். விழாவில் திருச்சி சிவா எம்.பி., இயக்குநர் சீனு ராமசாமி கலந்துகொண்டனர்.

அப்போது திருச்சி சிவா, 'கொடிமலர்' என்ற படத்துக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.பி.

ஸ்ரீனிவாஸ் பாடிய 'மவுனமே பார்வையால்' என்ற பாடலைப் பாடி அசத்தினார். பிறகு அவர் பேசியதாவது, '60 வருட காலம் கலையுலகில், அதுவும் இசைத்துறையில் நிலைத்து நிற்பது என்பது சாதாரணமான காரியம் அல்ல; அது ஒரு தவம். தமிழர்களான நாம் கலை என்று வந்துவிட்டால், மொழி பார்ப்பது இல்லை. லதா மங்கேஷ்கர் உள்பட ஹிந்தி கலைஞர்களை அங்கீகரிக்கிறோம், பாராட்டுகிறோம். ஆனால், நமது பி.சுசீலா என்ற அற்புதமான பாடகியை அவர்கள் ஏற்பது இல்லை.

ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி. பரமேஷ் அவர்களின் இசைப் பயணம் ஒரு மண்ணின் இசை வரலாறு. பொதுவாக ஒரு கலைஞன் தன் வாழ்

நாளில் ஒரு பத்தாண்டுகள் புகழுடன் இருப்பதே பெரிய விஷயம். ஆனால், தொடர்ந்து அறுபது ஆண்டுகள் இசையோடு பயணிப்பது என்பது சாதாரணமானதல்ல. இன்றைய நவீன காலத்தில் இசை எவ்வளவு மாறினாலும், மெல்லிசையையும் ராகங்களையும் அடிப்படையாகக் கொண்ட இசை எப்போதும் அழிவதில்லை. அந்த இசையைக் கட்டிக்காக்கும் ஒரு தூணாக பரமேஷ் விளங்குகிறார்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.