காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் காட்சிகள்!

அண்மையில் வெளிவந்த 'ஆறாம் வேற்றுமை' படத்துக்கு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்தது.

News image
Updated On :1 நவம்பர் 2025, 10:56 pm IST

அண்மையில் வெளிவந்த 'ஆறாம் வேற்றுமை' படத்துக்கு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்தது. இதையடுத்து இப்படத்தின் இயக்குநர் ஹரி கிருஷ்ணன் தனது அடுத்த படப் பணிகளைத் துவக்கியுள்ளார். பி.வி. ஆர். ஃபிலிம் மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை முருகன் தயாரிக்கிறார்.

படம் குறித்து இயக்குநர் பேசும்போது, 'ஆறாம் வேற்றுமை படத்துக்கு தமிழ் ரசிகர்கள் தந்த பேராதரவுக்கு நன்றி! இயக்குநர் சேரன் உள்ளிட்ட திரை ஆளுமைகள் இந்தப் படத்தை வித்தியாசமான முயற்சி என்று பாராட்டி இருந்தனர்.

ஊடகங்களும் நல்ல ஆதரவு தந்தன. அந்தக் காலகட்டத்தில் இப்படத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க முடியாததற்குப் பல காரணங்கள் இருந்த பொழுதிலும், தற்பொழுது இத்திரைப்படம் இணையத்தில் வெளியாகி, சமூக வலைதள செயலிகளினால் லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்துள்ளது.

பலரும் நல்ல கருத்துகளைப்பதிவிட்டு ஆதரவு அளித்த அந்தத் தருணத்தில் என்னுடைய அடுத்த பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன். நல்ல சிந்தனை, சிறப்பான நோக்கம், சமூக அக்கறை கொண்ட கதைகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன்.

இந்தக் கதையின் கரு தயாரிப்பாளருக்குப் பிடித்த காரணத்தால் அவர் இந்தப் படத்துக்கு முன்னுரிமை தந்து தயாரிக்கிறார். படப்பிடிப்புக்கான இடங்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படத்தின் பெயரும் அறிவிக்கப்படும். ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் பல காட்சிகள் உருவாக்கப்படவுள்ளன. இதற்காக ஹாலிவுட் நிறுவனம் ஒன்றோடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.