கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

செல்வராகவன் லைன் அப்!

விஷ்ணு விஷால் நடித்திருக்கும் 'ஆர்யன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

Published On :

விஷ்ணு விஷால் நடித்திருக்கும் 'ஆர்யன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அவருடன் ஷரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படம் வெற்றியடைந்துள்ள நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர் படக்குழுவினர்.

இந்த நிகழ்வில் இயக்குநர் செல்வராகவன் அவர் இயக்கும் '7ஜி ரெயின்போ காலனி 2' படம் குறித்தும், அவருடைய மற்ற லைன் அப் குறித்தும் பேசியிருக்கிறார்.

'ஏ. ஐ. மூலமாக சோகமான முடிவு கொண்ட கிளைமேக்ஸ் காட்சிகளை சமீப காலமாக மாற்றி வருகிறார்கள். அதைப் பற்றிய உங்களின் பார்வை என்ன?' என எழுப்பிய கேள்விக்குப் பதில் தந்த செல்வராகவன், 'தவறான விஷயமது. இங்க மட்டுமல்ல, ஹாலிவுட்டிலும் அது நடக்கிறது. ஒரு படம் வெளியானதும் அதை அப்படியே விட்டு விட வேண்டும்.

எந்த கிளைமேக்ஸை முதலில் வைத்திருந்தமோ, அது அப்படியே இருக்க வேண்டும். யாருக்காகவும் அதை மாற்றக் கூடாது. இப்போது '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தின் வேலைகள் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட அந்தப் படத்தின் வேலைகள் முடிந்து விட்டது. அந்தப் படத்தில் ஆச்சரியமான விஷயங்கள் இருக்கும். உங்களுக்கு அந்தப் படத்தின் மீது ஆர்வம் இருக்கிறது. அந்த ஆர்வத்தினால்தான் நானும் 'பார்ட் 2' எடுக்கச் சம்மதித்தேன். 70 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது.

இன்னும் கொஞ்சம்தான் முடிக்காமல் இருக்கிறது. கூடிய விரைவில் அந்தப் படத்தையும் பார்ப்பீர்கள். 'புதுப்பேட்டை 2'-வும் கூடிய விரைவில் ஆரம்பிப்பேன். 'ஆயிரத்தில் ஒருவன் 2' பற்றி கார்த்தியிடம் பேச வேண்டும். நிச்சயமாக அதுவும் நடக்கும். எல்லாவற்றையும் யோசித்து வருகிறேன்' எனப் பேசியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.