மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அப்பாவை நினைவு கூர்ந்த எஸ்.கே.

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'மதராஸி'.

News image
Updated On :7 செப்டம்பர் 2025, 2:18 pm

தினமணி செய்திச் சேவை

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'மதராஸி'. செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், ''நான் விழும்போது கைதந்து, எழும் போது உடன் நின்ற என் ரசிகர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். நான், 14 வருஷம் ஒரு பிளாஷ்பேக் சொல்கிறேன். அப்போது என்னை 'ஏழாம் அறிவு' பட நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க அழைத்தார்கள். ஆனால் கடைசியில் ஒரு ஹீரோவை வைத்து நிகழ்ச்சியை நடத்தி விட்டார்கள்.

அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிற வாய்ப்புக் கிடைத்திருந்தால், முருகதாஸ் முன்னாடி எதாவது செய்து பட வாய்ப்பு வாங்கி விடலாம் என நினைத்தேன். அதன் பின் அவரின் தயாரிப்பில் எனக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. தொடர்ந்து உழைத்தால் மேல வரலாம் என்று நினைத்து உழைத்து இன்றைக்கு முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ளேன்.

'கஜினி' படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் நான் அடுத்த நாள்தான் படத்தைப் பார்த்தேன். அப்பாவுக்கு 'ரமணா' படம் ரொம்பப் பிடிக்கும். அப்பா இன்றைக்கு இருந்திருந்தால் கண்டிப்பாக சந்தோஷம் அடைந்திருப்பார். இந்தப் படத்தில் ஷாருக்கான் நடிக்க வேண்டியது என்று சொன்னார்கள். அந்த இடத்தில் இப்போது நான் இருப்பது பெரிய விஷயம்.

காதல் என்பது தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்து அனிருத் காலம் வரைக்கும் இருக்கிற எவர்கிரீன். அப்படி ஒரு காதல் இந்தப் படத்திலும் இருக்கும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.