பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

படப்பிடிப்பு முடிந்தது

'அசுரன்' திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அழுத்தமாக தடம் பதித்த கென் கருணாஸ், நாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Published On :

'அசுரன்' திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அழுத்தமாக தடம் பதித்த கென் கருணாஸ், கதையின் நாயகனாக அறிமுகமாகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தை கென் கருணாúஸ இயக்கி, நடித்துள்ளார்.

சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி, அனீஷ்மா அனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறு இடைவெளிக்குப் பின் நளினி இப்படத்தின் மூலம் மறு பிரவேசம் செய்துள்ளார். விக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு ஜீ .வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களின் வாழ்வியலை மையப்படுத்திய இத்திரைப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கருப்பையா, ராம் மற்றும் சுலோச்சனா குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கியது. தொடர்ந்து ஒரே கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இடைவிடாமல் அறுபது நாள்கள் வரை நடைபெற்றது.

மாணவ, மாணவியர்களின் பள்ளிக்கூட வாழ்க்கையை திரையில் நேர்த்தியாகக் காட்சிப்படுத்துவதற்காக சென்னையின் மையப் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூட வளாகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது தினமும் குறைந்தபட்சம் நூறு துணை நடிகர்கள் கலந்துகொண்டனர். முக்கிய காட்சிகளைப் படமாக்கும் போது 300 முதல் 450 துணை நடிகர்கள் பயன்படுத்தப்பட்டனர். மேலும் படத்தின் முக்கிய பகுதியை படமாக்குவதற்காக படக்குழுவினர் கேரளாவில் உள்ள ஆலப்புழாவுக்கு ஒரு வாரம் பயணம் மேற்கொண்டனர்.

ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையில், நடன இயக்குநர் ஷோபி மாஸ்டரின் நடன அசைவில், பிரம்மாண்டமான பாடல் காட்சியுடன் உருவாகியுள்ள இப்படம் இம்மாத இறுதியில் திரைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.