கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'அப்பா பைக்'

தாய்க்கு நிகராகக் கொண்டாடப்பட வேண்டிவர் தந்தையும்தான்.

News image
Updated On :15 மார்ச் 2026, 11:05 am

எம்.மாரியப்பன்

தாய்க்கு நிகராகக் கொண்டாடப்பட வேண்டிவர் தந்தையும்தான். குடும்பத்தின் சுமைதாங்கியாக இருந்து, வாழ்நாளை குழந்தைகளுக்காகக் கழித்து, மண்ணைவிட்டு பிரிந்த தந்தை என்ற மாமனிதரைப் பலரும் நினைப்பதில்லை. ஆனால், அறுபத்து எட்டு வயதானபோதும், தன்னை வாழ வைக்க உழைத்த தந்தையை மறக்காமல் அவர் பயன்படுத்தி வந்த சிறிய ரக இரு சக்கர வாகனத்தை 'அப்பா பைக்' எனப் பெயரிட்டு பயன்படுத்தி வருகிறார் நாமக்கல்லைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர் ஆறுமுகம்.

அவர் கூறியதாவது:

'என்னுடைய சொந்த ஊர் திருச்செங்கோடு. தற்போது நாமக்கல்லில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வசித்து வருகிறேன்.

எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றேன். எனது தந்தை சென்னியப்பன் ஜவுளித் தொழில் செய்தார். 50 ஆண்டுகளுக்கு முன் என்னுடைய இளம் வயதில் ஜவுளித் தொழில் செய்து வந்த தந்தை, துணிகளை மூட்டையாகக் கட்டி இந்த பைக்கில் வைத்துதான் ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்வார். அவர் இருபது ஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட்டார்.

Story image

அப்போது பெட்ரோலில் ஓடிய வாகனம் இப்போது பேட்டரியில் இயங்கி வருகிறது. எனக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். வீட்டில் கார், 4 இரு சக்கர வாகனங்கள் உள்ளன. இருந்தபோதும் தந்தையின் நினைவாக இந்த வாகனத்தையே பயன்படுத்தி வருகிறேன்.

எந்த நிகழ்வுக்குச் சென்றாலும் தந்தை பயன்படுத்திய வாகனத்தில் சென்று வருவதையே மகிழ்ச்சியாகக் கருதுகிறேன்.

அதைப் பார்த்ததும் 'சென்னியப்பன் மகன் ஆறுமுகம் வந்துவிட்டார்' என்பதை மற்றவர்கள் பார்த்து தெரிந்துகொள்வர். அவரது நினைவாகவே 'அப்பா பைக்' என எழுதி உள்ளேன். சிலர் கேலியாகப் பார்ப்பதும், பேசுவதும் உண்டு. அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. அந்த வாகனத்தை தினசரி சுத்தம் செய்து விடுவேன். அதைப் பார்க்கும்போதெல்லாம் என் தந்தை என்னை விட்டு எங்கும் செல்லவில்லை என்கிற நிம்மதி கிடைக்கும்' என்கிறார் ஆறுமுகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.