"வாழ்வியல் வழிகாட்டி' அப்துற் றஹீம்!

 என் உயிருள்ளவரை, ஒவ்வொரு நிமிடமும் வீணாக்காது எழுத்துத் துறையில் உழைத்து என் பிறவிக் கடனை நிறைவேற்றுவேன்'' என்று வாழ்ந்த பேரறிஞர்  அப்துற் றஹீம்.  ÷20-ஆம் நூற்றாண்டின் இணையற்ற வாழ்வியல் இலக்கியங்களைப
"வாழ்வியல் வழிகாட்டி' அப்துற் றஹீம்!

 என் உயிருள்ளவரை, ஒவ்வொரு நிமிடமும் வீணாக்காது எழுத்துத் துறையில் உழைத்து என் பிறவிக் கடனை நிறைவேற்றுவேன்'' என்று வாழ்ந்த பேரறிஞர்

 அப்துற் றஹீம்.

 ÷20-ஆம் நூற்றாண்டின் இணையற்ற வாழ்வியல் இலக்கியங்களைப் படைத்த மாமேதையாகவும், இளைஞர்களின் வருங்கால வாழ்வுக்கு வழிகாட்டிய ஒளிவிளக்காகவும் திகழ்ந்த அப்துற் றஹீம், 1922-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி, மு.றா.முகமது காசிம் என்பவருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர்.

 ÷கல்லூரிக் கல்வியை முடித்து வெளிவந்த அவர் வாழ்வை எப்படித் தொடங்குவது எனத் தெரியாமல் கிடைத்த நூல்களைக் கற்றார். "படித்து முடித்து சம்பாதிக்காமல் இருக்கிறானே' என்று பலர் எள்ளி நகையாடினர். அவர்களுடைய ஏளனப் பேச்சு அப்துற் றஹீமுக்கு வருத்தத்தைத் தருவதற்கு மாறாக வேகத்தைத் தந்தது.

 ÷அந்த நேரத்தில் தொண்டியில் "வளர் பிறை' நூலகம் என்ற இலவச நூலகம் அமைக்கப்பட்டது. அந்த நூலகத்திற்கு பலர் நூல்களை நன்கொடையாக வழங்கினர். அவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து, எண் இடும் பணி அப்துற் றஹீமிற்கு வழங்கப்பட்டது. அங்குதான் அவரது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது.

 ஆம்ஸ்ட்ராங் எழுதிய "லார்ட் ஆப் அரேபியா' என்ற நூலும் நன்கொடை நூல்களுள் இருந்தது. படிப்பதில் பெருவிருப்பம் கொண்ட அவர், அந்நூலை மொழிபெயர்த்து எழுதினால் என்ன? என்று எண்ணினார். தனது விருப்பத்தைத் தந்தையிடம் தெரிவித்தார். "உன்னால் முடிந்தால் செய்' என்றார் தந்தை. அந்த வார்த்தைகள்தான் அவர் எழுத்துத்துறைக்கு வர உந்துசக்தியாயின.

 ÷1944-இல் "அரேபியாவின் அதிபதி' என்ற பெயரில் அவரது முதல் நூல் வெளிவந்துது. அப்போது அவருக்கு வயது 22. தமிழறிஞர் சாமிநாதசர்மா அந்நூலுக்கு அணிந்துரை வழங்கிச்

 சிறப்பித்தார்.

 ÷காரல் மார்க்சின் மூலதனம்தான், கப்பலுக்கு நிலக்கரி அள்ளிப்போடும் தொழிலாளியாகப் பணியாற்றிய ஹோசிமினைப் புரட்சியாளனாக மாற்றியது. ரஸ்கின் எழுதிய "கடையனுக்கும் கடைத்தேற்றம்' நூலும், டால்ஸ்டாயின் "ஆண்டவன் ராஜ்ஜியம் உனக்குள்ளே', "இனி நாம் செய்ய வேண்டுவது யாது?' போன்ற நூல்களும் காந்தியடிகள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. இத்தகைய மாற்றத்தை உண்டாக்கும் நூல்களை இயற்ற வேண்டும் என்ற எண்ணம் அப்துற் றஹீமின் உள்ளத்தில் ஆழப்பதிந்தது.

 ÷மக்கள் நலமாக வாழ, வெற்றிபெற்ற பல சான்றோர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்தார்.

 பிறவிப்பயனை நுகரவும், அர்த்தமுடன்

 வாழவும் என்ன செய்தால் வெற்றி பெறலாம்? என்பதை "வாழ்க்கையில் வெற்றி' என்ற நூலில் விளக்கியுள்ளார்.

 ÷"வாழ்க்கையில் வெற்றி' முதற்பதிப்பு வந்தது. இந்நூலே தமிழில் வெளிவந்த (அவர் எழுதிய 28 வாழ்வியல் நூல்களில்) முதல் வாழ்வியல் இலக்கியம். அவர் தோற்றுவித்த "யூனிவர்சல் பப்ளிசர்ஸ்' வெளியிட்ட முதல் நூலும் இதுதான். இந்நூல் முப்பது பதிப்புகள் வெளிவந்து சாதனை படைத்துள்ளது.

 ÷"கவலைப்படாதே', "முன்னேறுவது எப்படி?' "சுபிட்சமாய் வாழ்க', "வியாபாரம் செய்வது எப்படி?', "வாழ்வைத் துவங்கு', "வாழ்வது ஒரு கலை', "வழி காட்டும் ஒளி விளக்கு', "மகனே கேள்', "அன்புள்ள தம்பி', "வாழ்வின் வழித்துணை', "வாழ்வின் ஒளிப்பாதை', "மன ஒருமை வெற்றியின் இரகசியம்', "அகிலத்தின் அறிவுத் திறன்', "இல்லறம்', "விளக்கேற்றும் விளக்கு', "இளமையும் கடமையும்', "உன்னை வெல்க', "படியுங்கள் சிரியுங்கள்', "படியுங்கள் சிந்தியுங்கள்', "படியுங்கள் சுவையுங்கள்', "ஒழுக்கம் பேணுவீர்', "நினைவாற்றல் அறிவிற்கு ஓர் அணி' முதலான பல நூல்களில் புதிய புதிய செய்திகளைப் புதைந்து வைத்துள்ளார். இவை தமிழர்க்குக் கிடைத்துள்ள அறிவுப் புதையல்களாகும்.

 ÷அப்துற் றஹீம், பொழுதுபோக்கவோ, புகழுக்காகவோ, பிழைப்புக்காகவோ எழுதவில்லை. சமுதாயத்தின் பழுது நீக்க எழுதினார். எழுதுவதைப் புனிதமான தொண்டாகக் கருதினார். 71 ஆண்டுகள் எழுதுவதற்காகவே வாழ்ந்தார். விருதுகளையும், பட்டங்களையும் ஏற்றுக்கொள்ள நாணினார். மரபுகளையும் பண்பாட்டையும் பேணினார். இளைஞர்களின் எதிர்காலம் வீரிய விதைகளின் விளைச்சலாக வேண்டுமென்று சிந்தித்தார். படிப்பதையும், எழுதுவதையும் தவமாகக்

 கொண்டார்.

 ÷""ஆடம்பரமற்ற தூய வாழ்வு வாழ விரும்பிய எனக்கு எழுதுவது ஏற்றதாக இருந்தது'' என்றார். வாழ்விற்கும் எழுத்துக்கும் இடைவெளி இன்றி வாழ்ந்தார்.

 ÷அவர் எழுதிய வரலாற்று இலக்கியங்கள், தமிழாக்கம் செய்த நூல்கள், இஸ்லாமிய இலக்கியங்கள் பலப்பல. 2400 கவிதைகள் கொண்ட "நபிகள் நாயகக் காவியம்' என்ற நூல் அவரை மிகச் சிறந்த கவிஞராக உலகுக்கு அடையாளம் காட்டியது. அந்நூலே அவரது நிறைவு நூலாகவும் அமைந்தது. ஆம்! அந்நூலைக் காணாமலேயே 1993-இல் அப்துற் றஹீம் காலமாகிவிட்டார்.

 ÷அவர் தமிழுலகுக்குத் தந்துள்ள தன்னம்பிக்கைச் செல்வங்கள் பொன்னினும் சிறந்த கருவூலங்கள். தமிழ் உலகில் சுயமுன்னேற்ற நூல்களுக்கு அவரே முன்னோடியாகத் திகழ்ந்தார்.

 ÷""ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு நூலகம் இருக்க வேண்டும். அதில் கட்டாயம் அப்துற் றஹீமின் நூல்கள் இடம்பெற வேண்டும்'' என்ற அறிஞர் அண்ணாவின் வாக்குதான் நினைவுக்கு

 வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com