நகைச்சுவையும் நையாண்டியுமாகப் பாடுவதில் வல்லவர் ஒரு புலவர். அதனாலேயே அவர் "நையாண்டிப் புலவர்' என்று நண்பர்களால் அழைக்கப்பட்டார்.
÷அப்புலவரைச் சீண்டிப் பார்க்கும் விதமாக நண்பர் ஒருவர், ""என்ன புலவரே! எப்போது பார்த்தாலும் "நை...நை' எனப் பாடுகிறீர்களே!'' என்று கிண்டல் அடித்தார்.
÷""நை...நை... எனப் பாடுகிறேனா? அப்படிப் பாடுவதாகத் தோன்றவில்லையே! வேண்டுமானால் இப்போது நீங்கள் சொல்வதற்காக ஒரு பாட்டுப் பாடுகிறேன், கேளுங்கள்!'' எனக் கூறி ஒரு பாடலைப் பாடினார்.
""அத்தனை, அமுதனை, அப்பனை, அருளனை,
பித்தனை, பிறையனை, பெண்ணனை, பெரியனை,
சித்தனை, சிவத்தினை, சிந்தனைச் செழியனை,
முத்தனை, முதல்வனை, மூத்தானை நினைமினே!''
இப்பாடலைப் பாடிவிட்டு, ஒவ்வொரு சீரின் முடிவிலும் "னை..னை' என ஒலி உள்ள எழுத்துகள் வருவதைச் சுட்டிக்காட்டி, ""இதுதான் "நை...நை' எனப் பாடுவது!'' என்றார் நையாண்டிப் புலவர்!