வீங்குதோட் செம்பியன் சீற்றம் விறல்விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலால் - ஆங்கு
முடியும் திறத்தால் முயல்கதாம் கூரம்
படியிழுப்பின் இல்லை யரண். (பாடல்-49)
பருத்த தோளை உடைய சோழனது சினம், மிக்க ஆகாயத்தின்கண்ணே அசைந்து கொண்டிருந்த அசுரர்களது ஊரினைத் தேவர்கள் பொருட்டுத் தொலைவித்தலால், எவ்வளவு முடியுமோ முடியும் வழியால் முயற்சி செய்க. கூரிய அம்பு அடியானது பொருந்த மிக விரைவாகத் தொடுப்பின் அதனைத் தடுத்தற்குரிய கவசம் இல்லையாதலால். (க-து.) நம்மால் முடிந்த அளவும் முயற்சி செய்தால் முடியாத காரியம் ஒன்றில்லையாம்."கூர் அம்பு அடியிழுப்பின் இல்லை அரண்' என்பது பழமொழி.