தத்தமக்குக் கொண்ட குறியே தவமல்ல
செத்துக சாந்து படுக்கமனன் - ஒத்துச்
சகத்தனாய் நின்றொழுகும் சால்பு தவமே
நுகத்துப் பகலாணி போன்று. (பா-95)
தத்தமக்குத் தோன்றியவாறே கொண்ட வேடங்கள் தவமாகா. வாளாற் செத்துக, அன்றிக் குளிர்ந்த சந்தனத்தைப் பூசுக, மனம் பொருந்தி, நுகத்தின்கண் நடுவு நிற்கும் பகலாணியை ஒப்ப, ஒன்றுபட்டவனாகி நடுவு நிலையினின்று ஒழுகும் அமைதியே தவமாம். (க-து.) காய்த லுவத்த லின்றி ஒழுகும் அமைதியே தவமாம்.
"நுகத்துப் பகலாணி போன்று' என்பது பழமொழி.