பழமொழி நானூறு
ஒட்டிய காதல் உமையாள் ஒருபாலாக்
கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானேவிட்டாங் ககலா முழுமெய்யும் கொள்பவே
நட்டாரை ஒட்டி யுழி. (பா-85)
பொருந்திய அன்பினை உடைய உமையை ஒரு கூறாக, தண்டினையும் வெல்லுகின்ற ஏற்றுக்கொடியினையும் உடைய சிவபிரான் ஏற்றுக்கொண்டான். தம்மொடு நட்புச் செய்தாரைத் தாம் அடைந்தவிடத்து, அங்கே விட்டு நீங்காத தம் உடம்புமுழுதும் கொள்வார்கள். (க-து.) நல்லோர் தம் நட்பினரிடத்துத் தாம் வேறு, அவர் வேறு என்னும் வேறுபாடின்றி ஒழுகுவர். "ஒட்டிய காதல் உமையாள் ஒருபாலாக் கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டான்' என்பது பழமொழி.