பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

ஆற்றப் பெரியார் பகைவேண்டிக் கொள்ளற்கபோற்றாது கொண்டரக்கன் போரில் அகப்பட்டான்நோற்ற பெருமை யுடையாரும் கூற்றம்
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

ஆற்றப் பெரியார் பகைவேண்டிக் கொள்ளற்க
போற்றாது கொண்டரக்கன் போரில் அகப்பட்டான்
நோற்ற பெருமை யுடையாரும் கூற்றம்
புறங்கொம்மை கொட்டினா ரில். (பாடல்-126)


தவம் ஆற்றியதால் உண்டாகும் பெருமையினை உடையவர்களும்,  கூற்றத்தை அதன் பின்னே நின்று கைகளைக் குவித்துக் கொட்டி வலிய அழைத்தாரிலர். இராவணன் ஆராய்தலின்றி இராமனோடு பகை கொண்டு போரிடைப்பட்டு இறந்தொழிந்தான் (ஆதலால்),  மிகவும் பெரியவர்களுடைய பகையினை விரும்பி மேற்கொள்ளா தொழிக. (க-து.) அரசன் தன்னின் வலியாரிடத்துப் போர்செய்தல் ஒழிக என்பதாம். "கூற்றம் புறங்கொம்மை கொட்டினா ரில்' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com