ஆற்றப் பெரியார் பகைவேண்டிக் கொள்ளற்க
போற்றாது கொண்டரக்கன் போரில் அகப்பட்டான்
நோற்ற பெருமை யுடையாரும் கூற்றம்
புறங்கொம்மை கொட்டினா ரில். (பாடல்-126)
தவம் ஆற்றியதால் உண்டாகும் பெருமையினை உடையவர்களும், கூற்றத்தை அதன் பின்னே நின்று கைகளைக் குவித்துக் கொட்டி வலிய அழைத்தாரிலர். இராவணன் ஆராய்தலின்றி இராமனோடு பகை கொண்டு போரிடைப்பட்டு இறந்தொழிந்தான் (ஆதலால்), மிகவும் பெரியவர்களுடைய பகையினை விரும்பி மேற்கொள்ளா தொழிக. (க-து.) அரசன் தன்னின் வலியாரிடத்துப் போர்செய்தல் ஒழிக என்பதாம். "கூற்றம் புறங்கொம்மை கொட்டினா ரில்' என்பது பழமொழி.