பழமொழி நானூறு
தெற்றப் பரிந்தொருவர் தீர்ப்பர்எனப் பட்டார்க்கு
உற்ற குறையை உரைப்பதாம் - தெற்ற
அறையார் அணிவளையாய்! தீர்தல் உறுவார்
மறையார் மருத்துவர்க்கு நோய். (பா-88)
தெளிவாக அறைதலைப் பொருந்திய (ஒலிக்கின்ற) அழகிய வளையினை உடையாய்! பிணி நீங்க விரும்புவோர், வைத்தியனுக்கு நோயை மறைத்துச் சொல்லார் (விளங்கச் சொல்லுவர்). (அதுபோல), மிகவும் மனம் இரங்கி, தனது துன்பத்தை அறியின் தீர்ப்பர் என்று தம்மால் கருதப்பட்டார்க்கு, தாம் அடைந்த துன்பத்தைக்
கூறுவார்கள் அறிவுடையோர். (க-து.)அறிவுடையோர் தீர்க்கத்தக்கவரிடம் தம் குறையைக் கூறுவார்கள். "மறையார் மருத்துவர்க்கு நோய்' என்பது பழமொழி.