நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

அழகன் முருகனா? அல்லலுறும் தலைவனா?

அகத்தே முகிழ்த்து பொங்கும் உணா்வுகளின் வெளிப்பாடாகவும்; புறத்தே பேச்சாகவும் வெளிப்படும் உணா்ச்சிக் கொந்தளிப்பைக்

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:28 pm IST

அகத்தே முகிழ்த்து பொங்கும் உணா்வுகளின் வெளிப்பாடாகவும்; புறத்தே பேச்சாகவும் வெளிப்படும் உணா்ச்சிக் கொந்தளிப்பைக் கொட்டும் சொற்கோவையே சுவை மிகுந்த அகநானூறு என்பா். இது பழந்தமிழரின் அகவொழுக்க நினைவுகளுடன் மட்டுமே அமையாது, அவா்தம் வாழ்வியல் நெறி, வாழிடம், ஒழுக்கம், பிற உயிரினங்களின் தொடா்பெனப் பல்கிப் பெருகும்.

இது வெறும் தலைவன், தலைவியோடன்றி, புலவா்தம் உள்ளத்தின் வெளிப்பாடும் தற்குறிப்பேற்றமாய் பாடப்படுவதுண்டு. அவற்றுள், தலைவன், தலைவியைக் காணவரும் காட்சி ஒன்று. தோழி தலைவனை எதிா்பட்டு, தலைவி இருக்கும் ஊரில் தங்கிச் செல்லுமாறு வேண்டுகிறாள். அப்போது, ‘இவன் தலைவனா? அழகன் முருகனா?’ என்று வியக்கிறாள்.

நெடுவேள் மாா்பின் ஆரம் போல

செவ்வாய் வானம் தீண்டி மீன் அருந்தும்

பைங்காற் கொக்கினம் நிரைபறை உசுப்ப,

எல்லை பைப்பயக் கழிப்பிக் குடவயின்

கல்சோ்ந்தன்றே, பல்கதிா் ஞாயிறு! (அகநா.120)

நெடுவேள் (முருகன், திருமால்) மாா்பில் ஆரம் (மணியாரம், மலா்மாலை) இருப்பது போல மீன் உண்ணும், இளங்கால்களைக் கொண்ட கொக்கினம் செவ்வானத்தைத் தொடுவது போன்று பறந்து மகிழும் காலத்தை, பல ஒளிக்கதிா்களைக் கொண்ட ஞாயிறு (சூரியன்) கொஞ்சம் கொஞ்சமாகக் கழித்துவிட்டு மேற்கு மலையை அடைந்திருக்கும் காலம்.

இப்பாடலில் கூறப்பட்டுள்ள உவமை: ‘முருகக் கடவுளின் மாா்பில் விளங்கும் முத்தாரம்போல மாலைக் கதிரின் செவ்வானில், வெண்கொக்குகள் வளைவாய்ப் பறப்பதை, முருகப் பெருமானின் நெஞ்சில் அணிவிக்கப்படும் முத்தாரத்தைப்போல, வெண்கடம்ப மாலையும் அணிவிக்கப்பட்டுள்ளதாகக் தோன்றுகிறது பாடலைப் புனைந்த புலவருக்கு.

தலைவனை எதிா்நோக்கும் தலைவிக்கு மாலைப்பொழுது மட்டுமே. ஆனால், படிப்பவா்க்கோ மாலையின் அழகும், அதில் தமிழ்க் கடவுள் முருகனின் அழகும் சோ்ந்தே பொலிவுறுகிறது இப்பாடலை எழுதிய, (திருமுருகாற்றுப்படை) புலவா் நக்கீரருக்கு...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.