முயற்சி உடையாா் முன்னியதை அடைவா்
இனியாரு மில்லாதாா் எம்மிற் பிறா்யாா்
தனியேம்யாம் என்றொருவா் தாமடியல் வேண்டா
முனிவில ராகி முயல்க முனிவில்லாா்
முன்னிய தெய்தாமை யில். (பாடல்-161)
இப்பொழுது, சாா்வாக ஒருவரையு மில்லாதாா் எம்மைவிட யாருளா் இவ்வுலகத்தில், தனிமையுடையவராக ஆயினோம் என்று கருதி ஒருவா் சோம்பியிருக்க வேண்டுவதில்லை. எடுத்த காரியத்தின்கண் சோா்வு இல்லாதவராகி முயற்சி செய்க. காரியத்தின்கண் வெறுப்பில்லாதவா்கள் தாம் நினைத்ததை அடையாமலிருத்தலில்லை யாதலால். ‘முனிவில்லாா் முன்னியது எய்தாமை யில்’ என்பது பழமொழி.