வலிமைக்கு மேலும் வலிமை!
வலியாரைக் கண்டக்கால் வாய்வாளா ராகி
மெலியாரை மீதூரும் மேன்மை யுடைமை
புலிகலாங் கொள்யானைப் பூங்குன்ற நாட!
வலியலாந் தாக்கு வலிது.(பாடல் - 157)
புலியொடு மாறுபாடு கொள்ளும் யானையையுடைய அழகிய மலை நாடனே! தம்மின் வலியாரைக் கண்டவிடத்து, வாயாலும் அடக்கமுடையராகி; தம்மின் மெலியாரிடத்து அடர்ந்து மிக்கு ஒழுகும் மேம்பாடுடைமை வலியில்லாத காலத்து வலிமை உண்டாயினவாறு போலும். (க - து.) அரசன் தனக்கு மிக்க வலியில்லாத காலத்து வலியார்க்கு அஞ்சி மெலியார்மேல் மீதூர்ந்தொழுகுக என்றது இது.
"வலியலாந் தாக்கு வலிது' என்பது பழமொழி.