பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

நீறூர்ந்தும் ஒட்டா நிகரில் மணியேபோல்வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகிப்தாறாப் படினும் தலைமகன் தன்னொளி
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்


நீறூர்ந்தும் ஒட்டா நிகரில் மணியேபோல்
வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகிப்
தாறாப் படினும் தலைமகன் தன்னொளி
நூறா யிரவர்க்கு நேர். (பாடல்-214)


நீறு படிந்த மாணிக்கம் தன் ஒளி குறைவதில்லை. தான் என்றும் தன் சிறப்புடன் ஒப்பற்றதாகவே விளங்கும். அதுபோல, தலைமகனுடைய பண்பினாலே விளங்கும் அவன் ஒளியானது தாற்றிப் போகப்பட்டதாயினும்கூட நூறாயிரவருடைய பெருமைக்கு ஒப்பாகவே விளங்கும். "தாறாப் படினும் தலைமகன் தன்னொளி நூறா யிரவர்க்கு நேர்' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com