பழமொழி நானூறு
மெய்ம்மையே நின்று மிகநோக்கப் பட்டவர்
கைமேலே நின்று கறுப்பன செய்தொழுகிப்
பொய்ம்மேலே கொண்டவ் விறைவற்கொன்றார் குறைப்பர்
தம்மேலே வீழப் பனை. (பாடல்-201)
உண்மையான வழிகளிலேயே நிலைபெற்று அதனால், அரசனால் மிகவும் மதிப்புடன் கருதப்பட்டவர்கள்; கை கடந்து நின்று, அந்த அரசன் சினங்கொள்ளும் செயல்களைச் செய்து நடப்பவனாகி; வஞ்சனையும் மேற்கொண்டவர்களாக அந்த அரசனையே கொன்றார்களானால், அவர்கள் பனை மரத்தைத் தன்மேல் விழுமாறு வெட்டியவர்கள் போன்றவர்களாவர். "குறைப்பர் தம்மேலே வீழப் பனை' என்பது பழமொழி.