பெரிய குடிப் பிறந்தாரும் தமக்குச்
சிறியார் இனமா ஒழுகல் } வெறி இலை
வேலொடு நேர் ஒக்கும் கண்ணாய் } அஃது அன்றோ,
பூவொடு நார் இயைக்குமாறு. (பாடல்: 356)
இலைபோன்று விரிந்த வேல் போன்று கூரிய கண்ணை உடையவளே! பெரிய குடியில் பிறந்தோர் சிறிய குடியில் பிறந்தாரோடு இணைந்து இனமாக இணங்கி வாழ்தல் பூ மாலை தொடுக்கும் நாரோடு சேர்ந்து கொண்டது போல் ஆகும்.