செயல் வேண்டா நல்லவை செய்விக்கும், தீய
செய வேண்டி நிற்பின், விலக்கும், இகல் வேந்தன்-
தன்னை நலிந்து தனக்கு உறுதி கூறலால்-
முன் இன்னா, மூத்தார் வாய்ச் சொல். (பாடல்: 357)
அறிவிலும், அனுபவத்திலும், வயதிலும் மூத்த அறிஞர் அரசனிடம் சொல்லும் அறிவுரைகள் செய்ய வேண்டாதனவற்றைத் தடுக்கும். நல்லன செய்வதைப் பெருக்கும். தீயன செய்ய
இருப்பதைத் தடுக்கும். அரசன் வருத்தம் உறுவான் ஆயின், முதலில் சொல்லும் போது துன்பம் அளிப்பதாக இருக்கும். முடிவில் இன்பம் அளிக்கும்.